செரிமானத்திற்கும் உடல் நலத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு. செரிமானத்தில் பாதிப்பு ஏற்பட்டால் வயிற்றுவலியில் துவங்கி அடுத்தடுத்து பல வியாதிகள் பற்றிக் கொள்ளும்.
மருத்துவர்கள் கூறும் மற்றொரு விஷயம் என்னவென்றால், ஒரு மனிதனின் வயிற்றில் ஏராளமான கிருமிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கேற்ற தீணி போடும்போது அந்த நோய் வளர்ந்து நம்மைத் தாக்குகிறது. எனவே, நாம் உண்ணும் உணவும், அது செரிமானம் ஆவதும்தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான விஷயங்கள் ஆகின்றன.
அதனால்தான் பெரும்பாலான வியாதிகள் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளால் வருகின்றன என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே செரிமானத்தைப் பற்றி மேலோட்டமாகவாவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பொதுவாக நாம் சாப்பிட்ட உணவு 3 முதல் 4 மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிட வேண்டும். நாம் முதலில் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி பசி என்ற உணர்வு ஏற்பட்ட பிறகுதான் அடுத்த உணவை உண்ண வேண்டும்.
சாப்பிட்ட பின்பு அதிகமாக நீர் அருந்துவது நல்லது. ஆனால் சாப்பிடும் முன் நீர் அருந்துவது ஜீரண இயக்கத்தை கெடுத்துவிடும். நடுநடுவேயும் நீர் அருந்துவது கூடாது. ஆனால், பசி எடுத்த பிறகு, சாப்பிட இன்னும் சிறிது நேரமாகும் என்று தெரிந்தால் நீர் அருந்துவது வயிற்றைக் காப்பாற்றும் விதத்தில் அமையும்.
ஒவ்வொருவரும், தங்களது செரிமானத் திறனைப் பற்றி அறிந்திருக்க வேண்டாம். ஒரு சிலருக்கு சில உணவுப் பொருட்கள் செரிக்க நேரமாகும். அவைகளை உண்ணும்போது, அடுத்த உணவை நேரம் தாழ்த்தியே உண்ண வேண்டும்.
பொதுவாக நாம் சாப்பிட்ட உணவு 3 முதல் 4 மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிட வேண்டும். அப்படி இருந்தால் நம் உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம்.
பரோட்டா போன்ற சில கடினமான உணவுகள் ஜீரணமாக கால தாமதம் ஆகலாம். பரோட்டா போன்ற உணவுகளை உண்டால் அதிகமாக நீர் அருந்த வேண்டியது ஜீரணத்திற்கு அவசியமாகிறது.
இயல்பாக நான்கரை மணி நேரம் அல்லது 5 மணி நேர இடைவெளிக்குப் பிறகே மீண்டும் பசிக்கத் தொடங்கினால் உடலின் ஜீரண உறுப்புகள் நல்ல நிலையில் செயல்படுகிறது எனலாம்.
இரவு உணவுக்கும், காலை உணவுக்குமான இடைவெளியானது சற்று வித்தியாசப்படும். இரவு உணவு உண்ட பிறகு வெகு நேரம் கழித்த அடுத்த உணவை உண்பதால், காலை உணவு சற்று எளிய உணவாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. காலையிலேயே, அசைவ உணவுகளை ஒரு பிடி பிடித்தால், வயிற்றின் செரிமாணத் திறன் வெகுவாக பாதிக்கும்.
ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வியல் முறைகளுக்கு ஏற்றபடி உணவு உண்ண வேண்டும். கடினமான வேலைகளை செய்பவர்கள் உழைப்புக்குத் தேவையான சக்தியை அளிக்கும் விதத்தில் உணவை உண்ணலாம். ஆனால் அவர்களுக்கு உடலில் கொழுப்பு சேராது. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்தபடி இருப்பவர்கள் உணவை கட்டுப்பாடாகவே உண்ண வேண்டும்.
வாரத்தில் அல்லது மாதத்திலாவது ஒரு நாள் உணவு ஏதும் சாப்பிடாமல் இருப்பது, வெறும் பழச்சாறு, பழங்கள் மட்டும் சாப்பிடுவது வயிற்றுக்கு நல்ல ஓய்வை அளிக்கும்.
காலையில் எழுந்ததும் பல் துலக்கியப் பிறகு வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது, வயிற்றை சுத்தப்படுத்த உதவும்.
சாப்பிட்ட பிறகு பழங்கள், பழச்சாறு அருந்துவது சரியான முறையல்ல. உணவு உண்ண ஒரு மணி நேரத்திற்கு முன்பு பழங்கள் சாப்பிடுவதுதான் சரியான ஜீரண முறைக்கு உதவும்.
வயிறு முட்ட சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடனடியாக அதனை நிறுத்திவிடுங்கள். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு ஜீரணமாகவில்லையே என்று கஷ்டப்படுவதைவிட, ஜீரணமாகக் கூடிய அளவிற்கு மட்டும் உண்பதுதான் நல்லது.
நீங்கள் உங்கள் வாயைக் கொப்பளிக்க வேண்டும் என்றால், வாய் முழுவதும் நீரை நிரப்பி விட்டு கொப்பளிக்க முயற்சி செய்து பாருங்கள். அசைக்கக் கூட முடியாது. சிறிது நீரை வெளியேற்றிவிட்டு கொப்பளித்தால் எளிதாக கொப்பளிக்க முடியும். அப்படித்தான் வயிறும். வயிறு முழுக்க உணவு இருந்தால், வயிறு எப்படி உணவை சீரணிக்கும் பணியை செய்ய இயலும் என்பதை உணருங்கள்.
ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று தெரிந்தால், அந்த உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. அதிகமான மருந்துகளை எடுத்துக் கொள்வதும் உடல்நிலையை பாதிக்கும். எனவே மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்த மருந்துகளையும் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம்.
பசித்த பின், பாதியளவு சாப்பாட்டை சாப்பிட்டு தண்ணீர் அதிகமாக குடித்து ஜீரணத்திற்கு நாம் உதவி செய்ய வேண்டியது நமது கடமையாகிறது.
NANDRI: WEBDUNIA
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment